NEW POST

Pages

Tuesday, March 31, 2015

WhatsApp voice calling feature rolled out to all Android users

Earlier this month, WhatApp had started rolling out voice calling feature for everyone. However, the activation didn't really go through for several users and it looked like the invites had been disabled. However, today, users in India have started receiving the WhatsApp voice feature without the need for any invite.

If you've still haven't got the WhatApp voice feature activated , then here's what you need to do. Firstly, download version 2.11.528 from the Play Store or version 2.11.531 from the WhatsApp website. Once you have the latest version, voice-calling ability can be activated by receiving a call from someone whose voice-calling is already activated.
The WhatsApp voice calling feature is available only for Android, and is expected to make its way to iOS users soon. At the Facebook F8 conference held recently, WhatsApp cofounder Brian Acton said that the messaging service is preparing to bring the voice calling feature to iOS users in the coming weeks. It is known that some tech enthusiasts have already found out ways to activate voice calling on iPhones. However, that requires jail breaking the iPhone.

Interestingly, WhatsApp calling seems to be now open to all in India, just when reports about Trai seeking views to prepare regulatory framework for Internet-based calling and messaging applications or over-the-top (OTT) players have started surfacing online.

Read more ...

Monday, March 30, 2015

முடிந்தது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சகாப்தம்

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், தொடர்ந்து முன்னிறுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இனி செயல்பாட்டிற்குக் கிடைக்காது. இதற்குப் பதிலாக, விண்டோஸ் 10 வெளிவரும்போது, உடன் கிடைக்கும் பிரவுசரே முதன்மை இடம் பெறும். தற்போது ஸ்பார்டன் (Spartan) என அழைக்கப்படும் இந்த பிரவுசர், இதே பெயருடனோ அல்லது புதிய பெயருடனோ நுகர்வோருக்குக் கிடைக்கும். சென்ற வாரம், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற, மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்ந்த வர்த்தக மாநாட்டில், இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் கிறிஸ் கபோஸ்ஸிலா இதனைத் தெரிவித்தார். "விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்பட இருக்கும், நுகர்வோருக்கான பிரவுசருக்கு என்ன புதிய பெயரை அளிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்" என்று அறிவித்தார். எனவே, இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற பெயரில் நுகர்வோருக்கான பிரவுசர் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வந்த வரலாறு:இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1.0:1995 ஆம் ஆண்டில், விண்டோஸ் 95 சிஸ்டத்துடன், அதன் ஒரு பகுதியாக வெளிவந்தது.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1.5: முதல் பதிப்பு வெளியாகி, ஆறு மாதங்களுக்குப் பின் விண்டோஸ் என்.டி. சிஸ்டத்திற்காகத் தரப்பட்டது.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 2.0: 1995 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் விண்டோஸ் 95 மற்றும் வின்டோஸ் என்.டி. சிஸ்டங்களுக்கானதாய் வெளியிடப்பட்டது.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 3.0: ஆகஸ்ட், 1996ல் விண்டோஸ் 95 சிஸ்டத்துடன் தரப்பட்டது. இந்தப் பதிப்பில் தான் இன்டர்நெட் மெயில் 1.0 மற்றும் விண்டோஸ் அட்ரஸ் புக் அறிமுகப்படுத்தபட்டது.பதிப்பு 4.0: செப்டம்பர் 1997ல் வெளியாகி, விண்டோஸ் 95 சிஸ்டத்துடன் அப்டேட் ஆக வழங்கப்பட்டது. பின்னர் விண்டோஸ் 98 சோதனைப் பதிப்புடன் தரப்பட்டது.பதிப்பு 5: மார்ச், 1999ல் வெளியானது. விண்டோஸ் 98 சிஸ்டத்தின் இரண்டாவது எடிஷனுடன் தரப்பட்டது. விண்டோஸ் 3.1 மற்றும் விண்டோஸ் என்.டி. 3 ஆகியவற்றுடன் வந்த இறுதி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இதுதான். பதிப்பு 5.5.: ஜூலை 2000ல், விண்டோஸ் மில்லினம் (விண்டோஸ் மி) சிஸ்டத்துடன் கிடைக்கப் பெற்றது. பதிப்பு 6.0: ஆகஸ்ட் 2001ல், அதே மாதம் வந்த விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்புடன் வெளியானது. இதில் தனிநபர் மற்றும் சில பாதுகாப்பு அம்சங்கள் முக்கியமாக மேற்கொள்ளப்பட்டன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தனியாகத் தரப்பட்டது இதுவே இறுதியாகும். பின்னர் இந்த பிரவுசர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்தே தரப்பட்டது. இந்த வெளியீட்டில் தான் முதன் முதலில், சிஸ்டத்தின் செயல் வேகம் தாக்கப்பட்டு குறைக்கப்பட்டது. பின்னர், 2004ல், அமெரிக்காவின் கம்ப்யூட்டர் எமெர்ஜன்சி குழு, இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள குறைபாடான குறியீடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டு, ஹேக்கர்கள், அதில் தரப்பட்டும் பாஸ்வேர்ட்களைத் திருட முடியும் என அறிவித்த போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இமேஜ், அதன் வாடிக்கையாளர்களின் மனதில் சரிந்தது. குறைகளுக்கான அப்டேட் பைல்களை, மைக்ரோசாப்ட் தொடர்ந்து வெளியிட்ட போதும், மீண்டும் பழைய புகழை இன்டர்நெட் எக்ஸ்புளோரரால் பெற இயலவில்லை.பதிப்பு 7.0:
அக்டோபர் 2006ல் இது வெளியானபோது, பெரிய அளவில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாற்றங்களைக் கொண்டிருந்தது. இது விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தில் இணைத்துத் தரப்பட்டது. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை, சர்வீஸ் பேக் 2 கொண்டு மேம்படுத்தி இருந்தால், அதனுடனும் தரப்பட்டது.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8.0: 2009 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் வெளியானது. இதற்கு முன் பொதுமக்களுக்குச் சோதனை முறையில் இந்த பிரவுசர் பதிப்பு தரப்பட்டது. விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்கிய கடைசி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு இதுதான்.பதிப்பு 9.0: மார்ச் 2011ல் வெளியானது. விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்காத முதல் மைக்ரோசாப்ட் பிரவுசர் இதுதான்.பதிப்பு 10.0 : 2012ல் அக்டோபரில் வெளியானது. விண்டோஸ் 7, 2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. இந்த வெளியீடு முற்றிலும் புதிய கட்டமைப்பில் வெளியானது. "நீங்கள் அன்புடன் வெறுத்த பிரவுசரிலிருந்து நாங்கள் விலகி வந்து, முற்றிலும் புதிய பிரவுசரை உங்களுக்கு வழங்குகிறோம்" என மைக்ரோசாப்ட் அறிவித்தது.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11.0: 2013 அக்டோபரில் வெளியானது. விண்டோஸ் 8.1 அப்போது விண்டோஸ் 8க்குப் பதிலாக வெளியிடப்பட்டது.ஒரு சில நிறுவனங்கள் தங்கள் வர்த்தக இணைய தளங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே இயங்கும் வகையில் அமைத்திருப்பார்கள். இவர்களுக்கு மட்டும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொடர்ந்து கிடைக்கும். இதற்குப் பதிலாகத் தற்போது வடிவமைக்கப்பட்டு, ஸ்பார்டன் என்ற குறியீட்டுப் பெயருடன் கிடைக்கும் சோதனை அடிப்படையில் கிடைக்கும் பிரவுசர், முடிவில் இதே பெயரில் வரலாம்; அல்லது புதிய பெயருடன் அறிமுகப்படுத்தப்படலாம். எந்தப் பெயரில் வந்தாலும், மைக்ரோசாப்ட் தன் பிரவுசரை முற்றிலும் புதிய கட்டமைப்பில் கொண்டு வருகிறது என்பது உண்மை.ஸ்பார்டன் பிரவுசர் புதிய வகை இணையச் செயல்பாட்டிற்கான, புதிய கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டம் ஒரு சர்வீஸ் செயலியாகத் தரப்பட இருப்பதால், இந்த பிரவுசரையும் அதே அமைப்பில் உருவாக்கி வருகின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11, விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைந்து செயல்பட முடியாது. எனவே, நிறுவன வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் விண்டோஸ் 7 மற்றும் விண் 8.1 சிஸ்டங்களில் இயங்கும் வகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 தொடர்ந்து கிடைக்கும். விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, விண் 7 மற்றும் விண் 8.1 பயன்படுத்துபவர்களுக்கு இலவசமாக மைக்ரோசாப்ட் தர இருப்பதால், தனிநபர் பயன்பாட்டிற்கு இவற்றைப் பயன்படுத்துவோருக்கு, ஸ்பார்டன் பிரவுசர் அதே பெயரில் அல்லது புதிய பெயரில் கிடைக்கும்.

Read more ...

Sunday, November 30, 2014

காவல்துறை நவீன மயமாக்கல் திட்டம்: தகவல் தொடர்பு பரிமாற்ற வசதியால் வழக்குகள் உடனுக்குடன் தீர்வு

தமிழகத்தில் திருட்டுப் போன வாகனங்களை உடனுக்குடன் கண்டுபிடிப்பதற்கு,
குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைத்தளச் சேவை பெரிதும்
உதவிகரமாக உள்ளது. இந்த சேவையின் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்
போன வாகனத்தை போலீஸார் மிக அளிதாக மீட்க முடிந்திருக்கிறது.

38 லட்சம் ஆவணங்கள் கணினிமயம்

காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும், குற்றம்
மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைத்தளத் திட்டம் (சிசிடிஎன்எஸ்),
அனைத்து மாநில காவல்துறைகளிலும் அமல்படுத்தப்பட்டுவருகிறது. இதன்படி,
குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளின் தகவல்கள், காணாமல் போனவர்கள் மற்றும்
அடையாளம் தெரியாத சடலங்கள் போன்ற தகவல்கள் கணினிமூலம்
தொகுக்கப்படுகின்றன. தமிழகத்தில் 2003-ம் ஆண்டு முதல் பதிவான அனைத்து
வழக்குகள், பெறப்பட்ட புகார்களைப் பதியும் பணி கடந்த ஆண்டு மார்ச்
மாதத்தில் தொடங்கப்பட்டது. அதில் இதுவரை 38 லட்சம் வழக்கு ஆவணங்கள்
பதிவுசெய்யப்பட்டுள்ளன.

வாகனத்திருட்டு வழக்குகள்…

இத்திட்டத்தின்படி, மாநிலத்தில் உள்ள எந்தவொரு காவல்நிலையத்திலும்,
அவ்வப்போது பெறப்படும் புகார்களின் விவரங்கள் கணினியில் பதிவு
செய்யப்படுகின்றன. அவை உடனுக்குடன், சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவண
காப்பகத்தின் மாநில தகவல் மைய சர்வரில் பதிவாகிவிடுகின்றன. இதற்காக,
அனைத்து காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு முதல்
மாவட்டந்தோறும் பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது. மாநிலத்தின் ஏதோ ஒரு
மூலையில் உள்ள காவல்நிலைய கணினியில் பதிவுசெய்யப்படும் எந்த வகையான
புகாரையும், வேறிடத்தில் உள்ள காவல்நிலையத்தவரும், உயரதிகாரிகளும்
பார்க்கும் வகையில் அனைத்து காவல்நிலையங்களும் வலைப்பின்னலால்
ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனய இந்த வசதியால் பல்வேறு வழக்குகள் விரைவாக
முடிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, வாகனத்திருட்டு
வழக்குகளுக்கு வெகு வேகமாக தீர்வு கிடைப்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து மாநில குற்ற ஆவணக் காப்பக வட்டாரங்கள் கூறியதாவது:-

10 ஆண்டுக்கு முன் இறந்தவரின்…

சிசிடிஎன்எஸ் திட்டத்தில் வாகனத் திருட்டு வழக்குகள் வெகு விரைவாக
கண்டறியப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நூற்றுக்கணக்கான
வாகனங்கள் இச்சேவையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. ஒரே நாளில் 14 வாகன
வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.
உதாரணத்துக்கு, கடந்த 2004-ம் ஆண்டில் காணாமல்போன ஒரு இருசக்கர
வாகனத்தினை 10 ஆண்டுகள் கழித்து போலீஸார் சமீபத்தில் சிசிடிஎன்எஸ் வசதி
மூலம் கண்டுபிடித்துள்ளனர். புதுக்கோட்டையில் வாகனவிபத்தில் உயிரிழந்த
ஒருவரின் வாகனம் (டிஎன்63ஒய் 7481) அது. சமீபத்தில் மதுரையில்
கருப்பாயூரணி போலீஸார் வாகனச் சோதனை நடத்தியபோது அது திருட்டு வாகனம்
எனத் தெரியவந்தது. அந்த வாகனத்தின் எஞ்சின், சேஸிஸ் எண்களை சிசிடிஎன்எஸ்
வசதி மூலம் சரிபார்த்தபோது, உண்மை தெரியவந்தது.

வடமாவட்டங்களை விட தென்மாவட்ட போலீஸார் இந்த சேவையைச் சிறப்பாக
பயன்படுத்தி வருவதைத் தொடர்ந்து அனைத்து காவல்நிலையங்களுக்கும்,
இச்சேவையை நன்றாக பயன்படுத்திக் கொள்ளக் கூறி சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வசதி…

சிசிடிஎன்எஸ்-ல் பொதுமக்கள் பல்வேறு சேவைகளை ஆன்லைன்
(eservices.tnpolice.gov.in) வழியாகவே பெறமுடியும். அந்த இணையதளத்தில்
பொதுமக்கள், தங்களது எல்லாவிதமான புகார்களைப் பதிவு செய்யலாம்.
அவர்களுக்கு உடனடியாக ஒரு ரகசிய ஒப்புகை எண் வழங்கப்படும். அதற்கடுத்த
ஓரிரு தினங்களுக்குள் அவர்களுக்கு அது தொடர்பான பதில் இமெயலிலோ,
செல்போன் மூலமாகவோ அந்தந்த காவல்நிலையத்தில் இருந்து அனுப்பப்படும்.
தங்களது புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அவ்வப்போது அவர்கள்
பார்த்துத் தெரிந்துகொள்ளமுடியும்.

40 சதவீதம் 'செல்போன்' புகார்கள்…

எல்லா காவல்நிலையத்திலும் இந்த வசதியின் கீழ் பெறப்படும் புகார்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று தலைமையகத்தில் கண்காணிக்கப்படுகிறது.
ஒரு மாதத்துக்கு சராசரியாக 700 ஆன்லைன் புகார்கள் வருகின்றன. அவற்றில்
செல்போன் தொடர்பாக மட்டும் 40 சதவீதம் புகார்கள் வருகின்றன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பழைய வாகனம் அல்லது செல்போன் வாங்கும் முன்…

பழைய இரு சக்கர வாகனங்களையோ, செல்போன்களையோ வாங்குவதற்கு முன்பு
பொதுமக்கள், இந்த இணையதளத்தில், அதற்கான பிரத்யேக வசதி (check before
buying) செய்யப்பட்டுள்ள இடத்தில், வாகனப்பதிவெண், எஞ்சின் எண் மற்றும்
செல்போனில் உள்ள 15 இலக்க ஐஎம்இஐ எண்-ஐ பதிவு செய்தால், அவை காணாமல்
போனதாக வேறெந்த காவல்நிலையத்தில் புகார் பெறப்பட்டிருந்தால், அது
திருட்டுப் பொருள் (stolen) என்பதைக் கண்டறியமுடியும்.
Read more ...

Sunday, November 9, 2014

தெரியுமா உங்களுக்கு?( நிறுவியவர்கள்)

தெரியுமா உங்களுக்கு?( நிறுவியவர்கள்)




1.கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
சார்லஸ் பாபேஜ்

2.இண்டெல் நிறுவனத்தை நிறுவியவர்கள்.
ராபர்ட் நாய்ஸ் மற்றும் கார்ல்ன்மூர்.

3.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியவர்கள்.
பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன்.

4.ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஸ்டீவ்ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் ஓஸ்னிக்

5. ஐபிஎம் (IBM) நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஹெர்மன் ஹோலரித் மற்றும் ஜேக்கர்ட்(1911)

6.இலவச மென்பொருள் கழகத்தை நிறுவியவர்
ரிச்சர்ட் ஸ்டால்மேன்

7.சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தை நிறுவியவர்கள்
வினோத் கோசலா ,ஸ்காட் மேகன்லே ,பில் ஜாய் மற்றும் ஆண்டி பெக்டோல்சிம்

8.எஎம் டி (AMD) நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஜெர்ரி சாண்டர்ஸ் ,eட்டர்னி மற்றும் சிலர்


9.ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்தவர்கள்
ஜான்பர்டீன்,வில்லியம் சாக்லி மற்றும் வால்டர்ப்ரேட்டேன்

2.நுன்செயலியை(மைக்ரோபிராசசர்) கண்டுபிடித்தவர்கள்
டெட் ஹாஃப்(1971 –இண்டெல்)

10.குறைமின்கடத்தியை கண்டுபிடித்தவர்
இராபர்ட் நாய்ஸ்(1968)

11.இண்டக்ரல் சர்க்யூட் என்னும் ஐசி–யை கண்டுபிடித்தவர்
கில்பி

12.எலக்ட்ரானை கண்டுபிடித்தவர்
ஜே.ஜே.தாம்சன்

13.நியூட்ரானை கண்டுபிடித்தவர்
சாட்விக்

14.முதல் மெளசை வடிவமைத்தவர்
டக்ளஸ் எங்கால்பர்ட்(Douglas Engelbart)

15.முதல் லேசர் கதிரை கண்டுபிடித்தவர்
தியோடர் ஹெரால்ட்மெய்மன்(1960)

16. CRT-யை கண்டுபிடித்தவர்
ஃபெர்டினந்த் பிரான்(1987)

17.TCP நெரிமுறையை உருவாக்கியவர்
விண்ட்செர்ஃப்,ஸ்டிவ் கிராக்கர் மற்றும் டோனி ஹோகன்(1978)

18.முதல் டிஜிட்டல்கணினியை வடிவமைத்தவர்
ஹோவர்ட் ஐய்க்கன்(1944)

19. C -மொழியை உருவாக்கியவர்கள்
டென்னிஸ் ரிட்சி மற்றும் கென் தாம்ஸன்

20.லினக்சை உருவாக்கியவர்
லினஸ் டோர்வால்ட்
Read more ...

Saturday, October 18, 2014

ATM Online Complaint

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.
அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.
வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.
இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.
அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.
அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.
அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.
மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.
இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை
PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

Read more ...
Designed By Blogger Templates